• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய ஆறுகுட்டி எம்.எல்.ஏ

March 31, 2020 தண்டோரா குழு

கோவை துடியலூர் பகுதியில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்களுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அரிசி,கோதுமை மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கினார்.

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளன. முக்கிய தொழில் நகரமான கோவையில் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துடியலூர் 26 வது வார்டு பகுதியில் சுமார் 700 கிலோ அரிசி மற்றும் கோதுமையை அந்த பகுதியில. வசிக்கும் வட இந்திய தொழிலாளர்களுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி வழங்கினார். தொடர்ந்து கோவை கேட்டரிங் அசோசியேசன் சங்கம் சார்பாக ஆயிரம் பேர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி கூறுகையில்,

தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், அதே போல வெளியூர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க