• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆம் நான் தனிக்கட்சி தொடங்கவுள்ளேன் – கமல் பேட்டி

September 14, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் குறித்தும் சமூக பிரச்சினைகள் குறித்தும் பேசி வருகிறார். இந்நிலையில், அவர் ஆங்கில இணையதள பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், தனிக்கட்சி தொடங்குவீர்களா என்கிறார்கள். அதற்கு ஆம், அந்த எண்ணம் இருக்கிறது.

அரசியலுக்கு வரும் சூழலில் தனிக்கட்சி தொடங்குவேன். இது எனது விருப்பத்தின் பேரில் நடக்கபோவது இல்லை கட்டாயத்தின் பேரில் நடக்க இருக்கிறது. சமீபத்தில் நான் கேரள முதல்வரை சந்தித்தேன். அதற்காக கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப்போவதாக கூறினர்.

பல கட்சி தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால், பிற கட்சிகளில் சேரும் எண்ணம் இல்லை. அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்குள் இருக்கிறது. அரசியல் கட்சி என்பது கொள்கையை அடிப்படையாக கொண்டது.

எந்தவொரு கட்சியுடனும் எனது கொள்கையும், அடைய வேண்டிய லட்சியமும் ஒத்துப்போகும் என்று தோன்றவில்லை. தமிழ்நாட்டில் இருந்தே மாற்றத்தை தொடங்க வேண்டும் என விரும்புகிறேன். ஏன் தமிழகம் என்று கேட்கலாம். ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறன்.

முதலில் எனது வீட்டிலிருந்து அதை தொடங்கலாம் என்று நினைக்கிறன். அதேநேரம் மாற்றத்தை கொண்டுவர எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை. இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டதால் இதில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும் என நினைக்கிறன். ஊழல் இருக்காது சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கிவிட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்கவும் மாட்டேன் நான் இருக்கும் இடத்தில் ஊழலும் இருக்காது.

நான் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டால் வாக்காளர் என் செயலை கணக்கெடுக்க வேண்டும். அவ்வப்போது ஓட்டு போட வேண்டியதில்லை. 5 வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. சொன்னதை நிறைவேற்றாவிட்டால் என்னை உடனடியாக கவிழ்த்து விடுங்கள். இதுதான் நம் நாட்டின் அரசியலில் மாற்றத்தை கொண்டு வர ஒரே வழி.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க