January 21, 2019 தண்டோரா குழு
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படை முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 3 thiviravathigalதீவிரவாதிகள் உட்பட 12 பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்டாக் மாகாணத்தில் அந்நாட்டு பாதுகாப்புப்படை முகாம் இயங்கி வருகிறது. இன்று அப்பகுதிக்கு வந்த தலிபான் தீவிரவாதிகள் பாதுகாப்புப்படை முகாம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 9 மணியளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை அப்பகுதியில் வெடிக்கச் செய்தனர். பின்னர் தீவிரவாதிகள் பாதுகாப்புப்படை அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஆப்கான் பாதுகாப்புப்படை virarவீரர்கள் மற்றும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.