• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆன்லைனில் மொபைல் போன் விற்பனைக்கு தடைவிதிக்க செல்போன் விற்பனையாளர் சங்கம் கோரிக்கை

December 28, 2018 தண்டோரா குழு

கோவையில் ஆன்லைனில் மொபைல் போன் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு செல்போன் விற்பனையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்ட செல்போன் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் காந்திபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் ஜிஎஸ்டி வரி க்குப்பின் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே செல்போனுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட தலைவர் மன்சூர்,செயலாளர் பூபதி ராஜா மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க