April 20, 2018
தண்டோரா குழு
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கிறார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, தனது பிறந்தநாளான ஏப் 20-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் நீதிக்கான போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சந்திரபாபுநாயுடு அமைச்சரவையை சேர்ந்த 13 பேர் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் போராட்டதை நடத்துகின்றனர்.மற்ற அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.