• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆந்திராவில் பேருந்து ஆற்றில் விழுந்து 8 பேர் பலி 3௦ பேர் படுகாயம்

February 28, 2017 தண்டோரா குழு

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா அருகே தனியார் பேருந்து பாலத்திலிருந்து நதியில் கவிழ்ந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 3௦ பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 10 பேர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த விபத்து விஜயவாடா அருகில் முள்ளப்பாடு என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) அதிகாலையில் நேர்ந்தது.

ஹைதராபாதிலிருந்து புவனேஸ்வரத்துக்குச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் 45 பேர் இருந்தனர். சுமார் 1௦௦௦ கிலோ மீட்டர் தொலைவு பயணித்த அந்த பேருந்து விஜயவாடாவில் சிறிது நேரம் நின்றுள்ளது. ஏற்கெனவே ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்குப் பதிலாக வேறு ஒரு புதிய ஓட்டுநர் பேருந்தை ஓட்டியுள்ளார். முள்ளப்பாடு என்னும் இடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.3௦ மணியளவில் அந்தப் பேருந்து ஆற்றுப் பாலத்தில் வந்துகொண்டிருந்த போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டைத் திடீரென்று இழந்தது. உடனே, எதிர்பாராமல் பாலத்திலிருந்து கவிழ்ந்து நதியில் விழுந்தது.

இந்த விபத்தை பார்த்த நபர் உடனே காவல் துறையினருக்குத் தகவல் தந்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த 8 பேருடைய உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 3௦ பேரை நந்திகாமா அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களில் 1௦ பேருடைய நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களின் நிலையை கண்காணிக்க கிருஷ்ணா மாவட்டத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தப் பேருந்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. ஜே.சி. பிரபாகர் ரெட்டி என்பவருக்குச் சொந்தமான வாகர் டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து ஆகும். அந்தப் பேருந்தை ஓட்டியவர் ஆதிநாராயணா என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டிய ஓட்டுநரின் கவனக்குறைவுதான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் சின்னா ராஜப்பா, மற்றும் சுகாதார அமைச்சர் காமினேனி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க