February 19, 2018
தண்டோரா குழு
ஆந்திராவில் ஐந்து தமிழர்கள் ஏரியில் சடலமாக மிதந்தது தொடர்பாக சந்தேகமிருப்பின் சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுசெயலாளர் வைகோ,மற்றும் மலேசியா துணை முதல்வர் பினாங்கு ராமசாமி ஆகியோர் கோவை விமானநிலையத்தில் இன்று(பிப் 19)செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மதிமுக பொதுசெயலாளர் வைகோ ,
ஆந்திராவில் ஏற்கெனவே கூலி தொழிலில் ஈடுபட்ட தமிழர்களை படுகொலை செய்ததை கண்டித்து பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது ஏரியில் சடலங்களாக தமிழர்கள் ஐந்து பேர் கிடந்தது அதிர்ச்சி அளிப்பதாகவும், அடித்து கொல்லப்பட்டார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.மேலும் சந்தேகம் இருந்தால் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஆந்திர அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என கூறினார்.