• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆந்திராவில் தமிழர்கள் ஏரியில் சடலமாக மிதந்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் – வைகோ

February 19, 2018 தண்டோரா குழு

ஆந்திராவில் ஐந்து தமிழர்கள் ஏரியில் சடலமாக மிதந்தது தொடர்பாக சந்தேகமிருப்பின் சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுசெயலாளர் வைகோ,மற்றும் மலேசியா துணை முதல்வர் பினாங்கு ராமசாமி ஆகியோர் கோவை விமானநிலையத்தில் இன்று(பிப் 19)செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மதிமுக பொதுசெயலாளர் வைகோ ,

ஆந்திராவில் ஏற்கெனவே கூலி தொழிலில் ஈடுபட்ட தமிழர்களை படுகொலை செய்ததை கண்டித்து பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது ஏரியில் சடலங்களாக தமிழர்கள் ஐந்து பேர் கிடந்தது அதிர்ச்சி அளிப்பதாகவும், அடித்து கொல்லப்பட்டார்களா என்ற  சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.மேலும் சந்தேகம் இருந்தால் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஆந்திர அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என கூறினார்.

மேலும் படிக்க