• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆதியோகியை தரிசித்த ஆதரவற்ற முதியோர்கள்!

September 27, 2021 தண்டோரா குழு

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் ஆதியோகி இன்று கண்குளிர தரிசித்து இன்புற்றனர்.

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு கோவை அரசு ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் வசிக்கும் சுமார் 60 பேர் ஒரு நாள் இன்ப சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

சுற்றுலாவின் ஒரு பகுதியாக, கோவையின் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றாக விளங்கும் ஈஷாவிற்கு அவர்கள் வருகை தந்தனர். சாரல் மழையுடன் கூட ரம்மியமான காலை பொழுதில் ஆதியோகியை கண்குளிர தரிசித்து மகிழ்ந்தனர். பின்னர்,தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியையும் தரிசனம் செய்தனர்.

இந்த சுற்றுலாவை கோவை மாவட்ட சுற்றுலா துறையும், ஸ்கால் கிளப்பும் (SKAL Club) இணைந்து ஏற்பாடு செய்தன.

மேலும் படிக்க