• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி ஆட்சியர் தகவல்

January 7, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தாட்கோ நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.அதன் தொடர்ச்சியாக, தற்போது மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவிக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

வளர்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சிக்கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளித்து முடிக்க முடியும். இதன்மூலம், ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

மேலும், விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.இப்பயிற்சியினை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களும், கல்வி தகுதியில் பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் பெறலாம்.

பாஸ்போர்ட் உரிமம் மற்றும் உடல் தகுதிச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும். பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61 ஆயிரத்து 100 தாட்கோவால் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ ட்ரோன் கருவிகளை வாங்கலாம். உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம். விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு வேளாண் துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும் அல்லது தாட்கோவின் மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கவும் வழி வகை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க