• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆண்டின் 365 நாட்களும் மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும்: கமல் ஹாசன்

March 8, 2018 தண்டோரா குழு

ஆண்டின் 365 நாட்களும் மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன்  காஞ்சிபுரம் மாவட்டம் காலவாக்கம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

கலை என்ற பாதையை கொண்டு முன்னேறியவன் நான். உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக அரசியல் உள்ளது. மாணவர்கள் அரசியலை கண்காணிக்க வேண்டும். அரசியலை பலர் கண்காணிக்க மறந்ததால் தான் இந்த நிலை உள்ளது.  மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளேன். மாணவர் சமுதாயத்தோடு இணைந்து மீண்டும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். கல்லூரி பருவம் உற்சாகமானது  தான் என்ற போதிலும், படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அப்துல் கலாம் கூறியதைப் போல் அனைவரும் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்டின் 365 நாட்களும் மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்றும், மக்கள் சேவையில் தான் தனது உயிர் பிரியும் என்றும் கமல் மாணவர்களிடையே பேசினார்.

மேலும், மக்களாட்சியை மகளிர் தான் மலர வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தை இளைஞர்கள் உதவியுடன் தான் முன்னேற்ற முடியும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.  இளைஞர்கள் உதவியின்றி முன்னேற்றம் என்பது சாத்தியமாகாது என்று மாணவர்களிடம் கமல் தெரிவித்தார்.

மேலும் படிக்க