• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆட்டிசம் அண்ட் பியாண்ட் அமைப்பின் சார்பில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு கருத்தரங்கு

March 31, 2021 தண்டோரா குழு

கோவை கோல்ட்வின்ஸ் தீபா மில் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஆட்டிசம் அண்ட் பியாண்ட் அமைப்பு உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இது குறித்து ஆட்டிசம் அண்ட் பியாண்ட் அமைப்பின் தலைமை நிர்வாக இயக்குனர் தீபா மாலினி கூறுகையில்,

இன்றைய கால கட்டத்தில் உலக அளவில் ஆட்டிசம் பாதிப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது குறித்து இன்னும் விழிப்புணர்வு மக்களிடையே உள்ளது.தற்போது அவசியத்தேவை இந்த பாதிப்புக்கு உட்பட்டவர் எவ்வாறு சீர்படுத்துவது அதற்கு உண்டான வழிமுறைகள், என்ன என்பதை புரிதல் போன்றவற்றை மக்களுக்கும் பெற்றோருக்கும் உணர்த்தப்பட வேண்டும். இதற்கு டாக்டர் கிரீன் ஸ்பேன் அவர்கள் ஆட்டிஸம் குறைபாடுகள் குறித்து பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘FLOUR TIME THERAPY’ ஆட்டிசம் குறைபாடுகளை நீக்க உதவியாக உள்ளது என கருத்தரங்கில் தெரிவித்தார்.

மேலும், இந்த முறையில் பயிற்சிப் பெற்ற குழந்தைகள் மற்றவர்களுடன் நல் புரிதல் உணர்வுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க