• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடி அம்மாவசையில் வெரிச்சோடிய பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

July 20, 2020 தண்டோரா குழு

கோவை பேரூர் படித்துறை மற்றும் சுற்றுவட்டார பொது இடங்களில் இறந்தவர்களுக்கான தற்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் ஆடி அம்மாவாசையான இன்று பேரூர் பட்டீசுவரர் வெரிச்சோடி காணப்பட்டது.

ஆடி அம்மாவாசையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு பேரூர் படித்துறை மற்றும் அருகே உள்ள தனியார் திருமணம் மண்டபங்களில் ஒவ்வொரு ஆண்டும் தற்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கில் வரும் மக்களால் கோவில் வளாகம், படித்துறை வளாகம், தனியார் திருமண மண்டபங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், பேரூர் படித்துறை மற்றும் தனியார் திருமணம் மண்டபங்களில் இறந்தவர்கள் தற்பணம் செய்ய தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பேரூர் வட்டாச்சியர் ராதாகிருஸ்ணன் தலைமையில், ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்றது. மேலும் தடையை மீறி தற்பணம் செய்யும் அர்ச்சகர் உள்ளிட்ட பொது மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.. இதனால் இன்று ஆடி அம்மாவாசையை முன்னிட்டு மக்கள் வெள்ளமாக காணப்படும் பேரூர் பட்டீசுவரர் கோவில் மற்றும் சுற்றுவட்ட்டார பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெரிச்சோடி காணப்பட்டது.மேலும் இன்று திதி கொடுக்கும் மக்கள் வீடுகளிலேயே அம்மாவாசை விரதம் இருந்து வழிப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க