• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர பள்ளி கல்வித்துறை அனுமதி

June 26, 2018 தண்டோரா குழு

ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் பகவான்.இவர் திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டார்.இதனை அறிந்த அப்பள்ளி மாணவ,மாணவிகள் அவர் வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அவரை விடாமல் கதறி அழுத காட்சி பார்ப்போரையும் கண்கலங்க வைத்தது.மேலும்,இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் பகவான் தங்கள் பள்ளியை விட்டு செல்லக்கூடாது என மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில்,ஆசிரியர் பகவான் வெள்ளியகரம் அரசு உயர்நிலை பள்ளியிலேயே பணியை தொடர கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க