• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆங்கில புத்தாண்டு வரவேற்று மருதமலையில் குவிந்த பக்தர்கள்

January 1, 2023 தண்டோரா குழு

2023 ஆண்டு ஆங்கில புத்தாண்டு ஓட்டி தமிழகமெங்கும் உள்ள திருக்கோயிலில் விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது அது சமயம் கோவையில் பிரசித்தி பெற்ற ஏழாம் படை வீடு என கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை வரவேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் அது சமயம் சுவாமிக்கு சிறப்பு ராஜா அலங்காரத்தோடு பூஜைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டது.

மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அது சமயம் அடிவாரத்தில் சிறிது தூரத்துக்கு முன்பாகவே வாகனங்களை நிறுத்த வடவள்ளி காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இருப்பினும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் கோவில் நிர்வாகமும் காவல்துறையுடன் இணைந்து மக்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார்.

மேலும் படிக்க