• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆகஸ்ட் 1௦ல் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி

August 6, 2019 தண்டோரா குழு

1991 முதல் 94 ஆம் ஆண்டு வரை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பி.எஸ்.ஜி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளையில் நடைபெற்றது.

இதில் பேசிய பி.எஸ்.ஜி முன்னாள் மாணவர் சங்க தலைவர் லட்சுமி நாராயணசாமி,

3வது ஆண்டாக இந்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது இந்த ஆண்டு நடைபெற உள்ள விழாவில் 600 க்கும் மேற்பட்ட மானவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பிற மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் காவல்துறை, சினிமா உள்ளிட்ட துறைகளில் சாதித்து கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்க ஆர்வமுடன் இருப்பதாகவும் லட்சுமி நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் படிக்க