• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி சார்பில் மடப்பள்ளி (சமையல் அறை) திறப்பு

December 17, 2022 தண்டோரா குழு

அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி சார்பாக இன்று காலை கோவைப்புதூரில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் மடப்பள்ளி (சமையல் அறை) திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி சார்பாக 5வது நிரந்தர சேவை திட்டமாக
பெருமாள் கோவிலில் மடப்பள்ளி (சமையல் அறை) திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. இதன் மதிப்பீடு சுமார் ரூபாய் 8 லட்சம் ஆகும். இதனை அலையன்ஸ் கிளப் கோவை மாவட்ட ஆளுநர் அலையன்ஸ் சீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் அலையன்ஸ் கிளப் முதல் துணை ஆளுநர் அலையன்ஸ் டாக்டர் ஶ்ரீநிவாசகிரி மற்றும் அலையன்ஸ் பிரியா கிரி அவர்கள் இதற்கான நன்கொடை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட அமைச்சரவை இரண்டாம் துனை ஆளுநர் அலையன்ஸ் ராஜன் மற்றும் செயலாளர் ரமேஷ்,ஹில் சிட்டி சங்கத் தலைவர்சதீஷ்,செயலாளர் சரவணராஜா, மாவட்ட தலைவர் பிரபாகரன் அலையன்ஸ் நிதிஷ் குட்டன், அலையன்ஸ் ஜெயகிருஷ்ணன், அலையன்ஸ் ஆனந்த சிவகுமார், அலையன்ஸ் துரைச்சந்திரன், அலையன்ஸ் கோபாலகிருஷ்ணன்,மற்றும் சங்கர செல்வராஜ், அலையன்ஸ் வள்ளியம்மாள் மற்றும் திருவேங்கடவன் சேரிட்டபிள் சொசைட்டி தலைவர் நரசிம்மன் செயலாளர் ரங்கராஜன் கலந்து கொண்டனர். ஒப்பிலி ஐயங்கார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து மாபெரும் மருத்துவ முகாம் திருவேங்கடவன் சாரிடபிள் சொசைட்டி& ராமகிருஷ்ணா மருத்துவமனை உடன் இணைந்து நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமில் சுமார் 2 லட்சம் மதிப்புடைய அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக பொதுமக்களுக்கு செய்யப்பட்டது. இதனை அலையன்ஸ் மாவட்ட ஆளுநர் அலை சீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க