August 4, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் குறு சிறு தொழில் முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குருந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கோவை மாவட்டத்தின் மின்பகிர்மான தலைமை மின் பொறியாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அவர் அளித்துள்ள மனுவில்,
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு துணை மின்நிலையங்கள் மூலமாக கடந்த 15 நாட்களாக ஒரு நாளைக்கு எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் 5 முதல் 10 முறை வரை, 10 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த அறிவிக்கப்படாத மின்நிறுத்தத்தால்
குறு சிறு தொழில் முனைவோர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு
வருகிறோம்.
குறிப்பாக இந்த அறிவிக்கப்படாத
மின்நிறுத்தத்தால் ஓடிக்கொண்டு இருக்கும் இயந்திரங்கள் சடன் என்று நிற்ப்பதால் இயந்திரத்தில் இருக்கும் ஜாப்புகள் பழுதாவதுடன், அதற்காக அமைக்கும் டூல்கள் உடைவதாலும் , கடுமையான பொருள் நஷ்டத்தை நாங்கள் சந்தித்து வருகிறோம். இதனால் எங்களுக்கு கிடைக்கும் சொற்ப்ப லாபங்களை கூட, ஏற்படும் பொருள் நஷ்டத்துக்கு கொடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு வருகிறோம். கடுமையான பாதிப்பில் இருந்து எங்களை பாதுகாக்கவும், அறிவிக்கப்பட மின்நிறுத்தம் செய்யப்படுவதில்
பாதுகாக்கவும் வேண்டுகிறோம்.
தற்போது மின் பராமரிப்புக்காக
அனைத்து துணை மின்நிலையங்களிலும் மாதம் ஒருமுறை மின்நிறுத்தம்செய்யப்பட்டும், அனுதினமும் அறிவிக்கப்படாத மின்நிறுத்தத்தால் பெரும் நஷ்டம் சந்திக்கும் தொழில் முனைவோர்களை பாதுகாக்க தங்கள் நடவடிக்கை எடுத்து தடை இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.