• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருணாச்சல பிரதேசத்தை அபகரிக்கும் சீனா!

April 19, 2017 தண்டோரா குழு

அருணாச்சலபிரதேச மாநிலத்தின் ஆறு ஊர்களின் பெயர்களை சீனா மாற்றி அமைத்துள்ளது.அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா அழைத்து வருகிறது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தின் ஆறு ஊர்களின் பெயர்களை சீனா அரசு திடீரென மாற்றியமைத்துள்ளது. தங்கள் நாட்டு பாரம்பரியப்படி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சீன உள்விவகாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை என சீனா விளக்கமளித்துள்ளது.

ஏற்கனவே தங்களுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை இந்தியா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக சீனா பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகிறது. தலாய்லாமாவின் அருணாச்சல பிரதேச பயணம் சீனாவுக்கு ஆத்திரமூட்டியிருந்த நிலையில் இந்த பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க