• Download mobile app
24 Feb 2026, TuesdayEdition - 3667
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரபிக் கடலில் உலகிலேயே மிகப் பெரிய வீர சிவாஜி சிலை

December 21, 2016 தண்டோரா குழு

அரபிக் கடலில் நிறுவப்போகும் மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலை உலகிலேயே மிக பெரிய நினைவுச் சின்னமாக இருக்கும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2௦) தெரிவித்தார்.

தானே மாநிலத்தில் ஷஹபூர் என்னும் இடத்தில் குன்பி மரம் நடுவிழாவில் அவர் பேசியதாவது:

அரபிக் கடலில் நிறுவப்பட இருக்கும் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலை இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய நினைவுச் சின்னமாக இருக்கும். இந்தப் பணியை மேற்கொள்வதற்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷஹபூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் 2௦௦ கோடி ரூபாய் செலவில் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும். ஷஹபூர் மற்றும் முர்பாத் ஆகிய இடங்களைச் சுற்றுலாத் தலமாக மாற்ற தானே ஜில்லா பரிஷதுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதற்குத் தேவையான நிதியும் விரைவில் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க