• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்

September 26, 2020 தண்டோரா குழு

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால்
பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்காக பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில்,கடந்த மாதத்தின் இறுதியில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து எக்மோ மற்றும் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். மேலும்,கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாகவும், பிஸியோதெரபி சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால்,நேற்று முன் தினம் மாலை எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று உயிரிழந்தார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து,எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைப்பட்டது. பின்னர் அவரது மகன் எஸ் பி.சரண் இறுதி சடங்குகள் செய்து முடித்த பின் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.24 போலீசார் வீதம் 3 சுழற்சி அடிப்படையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க சென்றனர்.

மேலும் படிக்க