• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“அரசு ஊழியர்கள் விவகாரத்தில் தீர்வு காண்க” – மு.க.ஸ்டாலின்

April 26, 2017 தண்டோரா குழு

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“ தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் 15 கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வறட்சியும், குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடும் சூழலில் அரசு ஊழியர்களின் பணி முக்கியமானது.

அரசு ஊழியர்கள் நோட்டீஸ் கொடுத்தும் தமிழக அரசு பேச அழைக்காதது அரசின் மோசமான அணுகுமுறை ஆகும். அரசு நிர்வாகம் எப்படிப் போனால் எங்களுக்கென்ன என்ற போக்குடன் அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர்.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 110 விதி அறிவிப்புகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட முன்வரவில்லை. ஏற்கனவே சீர்குலைந்து கிடக்கும் அரசு நிர்வாகம் ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கும் அபாயத்தில் உள்ளது.

அரசு ஊழியர்களுக்காக ஜெயலலிதாவின் அறிவி்ப்பை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். அரசு ஊழியர் விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலையிட்டு தீர்வு காண வேண்டும்.”

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க