• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசியல் குறித்து கமல் பேசத் தகுதியானவர் – விஷால்

March 15, 2017 தண்டோரா குழு

“அரசியல் சூழ்நிலை குறித்து பேசுவதற்குக் கமல்ஹாசன் தகுதியானவர்தான்” என்று நடிகர் விஷால் கூறினார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் உள்ளிட்டோர் கொண்ட “நம்ம அணி” சார்பாக கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், விஷால், மிஷ்கின், ஞானவேல் ராஜா, பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

தயாரிப்பாளர்களின் நலனுக்காக 10 ஆண்டுகளாகக் குரல் கொடுத்து எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் இந்த அணி தற்போது போட்டியிடுகிறது என்றும் இது தொடர்பாக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தயாரிப்பாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும் விஷால் தெரிவித்தார்.

அப்போது, கமல் தொடர்ந்து அரசியல் சூழல் குறித்து பேசுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த விஷால், “நடிகர் சமுதாயத்தில் முக்கியமான நபர். தனக்குத் தெரிந்த விஷயத்தைத் துணிச்சலுடன் வெளிப்படையாகக் கூறுபவர். சினிமாவைப் பற்றிப் பேசுவதற்கு கமலுக்கு என்ன தகுதி இருக்கிறதோ அந்த அளவிற்கு அரசியல் சூழல் குறித்தும் பேசுவதற்கும் அவருக்குத் தகுதி உள்ளது” என்று கூறினார்.

மேலும் படிக்க