• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியல் கட்சி முகவர்கள் பின்பற்ற கூடிய நடைமுறைகள் குறித்தான ஆலோசனை கூட்டம்

November 19, 2020 தண்டோரா குழு

வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் பின்பற்ற கூடிய நடைமுறைகள் குறித்தான ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கோவையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கு.இராசமணி அண்மையில் வெளியிட்டிருந்தார்.இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நவம்பர் 21,22 தேதிகள் மற்றும் டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு,மேட்டுப்பாளையம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட முகாம்களில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசணை கூட்டம் கோவை வடக்கு கோட்டாச்சியர் சுரேஷ் தலைமையில் கவுண்டம்பாளையம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க ,மற்றும் தேசிய வாத காங்கிரஸ்,உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வடக்கு கோட்டாச்சியர் சுரேஷ்,

அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படும் முகவர்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்க்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவி புரியலாம் எனவும்,மேலும் இதில் முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக பேசினார்.இந்த கூட்டத்தில் கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ் குமார், மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் சாந்தாமணி,அன்னூர் வட்டாச்சியர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க