February 19, 2018
தண்டோரா குழு
அரசியல் ஒரு சாக்கடை என்றும் அதில் எந்த குப்பை விழுந்தாலும் கவலையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட சிவகாசி அருகே உள்ளே கோயில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முக அழகிரி கலந்துகொண்டார். அப்போது அவரை பேட்டியடுக்க செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் பேட்டியளிக்க மறுத்து விட்டார்.
அப்போது, உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி அரசியல் ஒரு சாக்கடை அதில் எந்த குப்பை விழுந்தாலும் எனக்கென்ன என்று கேட்டார்.
அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். முதுமை காரணமாக கருணாநிதி கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக ஓய்வில் இருக்கிறார். கருணாநிதி அழைத்தால் திமுகவில் இணைவேன் என்று அழகிரி கூறியுள்ளார்.