• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியல்வாதிகளோடு சேர்ந்து நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் – நீதிபதிகள் எச்சரிக்கை

January 9, 2019 தண்டோரா குழு

நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படாததை எதிர்த்து நிதிமன்றம் மீது அவமதிப்பு வழக்கு போடப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது நகராட்சி நிர்வாகத்துறைச் செயலர் ஹர்மந்தர் சிங், ஆணையர் பிரகாஷ் நேரில் ஆஜராகினர். புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடமே ஆகச்சிறந்த இடம் எனப் பதில்மனுவில் குறிப்பிட்டுவிட்டு இப்போது மாற்றிப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், அரசியல்வாதிகளோடு சேர்ந்து கைகோக்காமல் அரசு அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் பணிபுரிய வேண்டும் என அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதுமட்டுமின்றி நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், வரும் 11 ஆம் தேதி விசாரணையை தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க