• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மா உணவகத்திற்கு ரூ. 87 லட்சம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

June 1, 2020 தண்டோரா குழு

கோவையில் உள்ள அம்மா உணவகங்களை தடையின்றி செயல்படுத்தும் பொருட்டு அதிமுக சார்பில் ரூ.87 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர்.எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மாநகர காவல் ஆணையர் சுமித்சரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பராமரிப்பு மற்றும் உணவு வழங்கும் செலவினங்களுக்காக அதிமுக சார்பில் ரூ.87 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். ஊரடங்கு காலத்தில் கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் அதிமுக சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க