March 9, 2019
தண்டோரா குழு
அம்மா ஆட்சி சூப்பர் ஆட்சி, எடப்பாடி ஆட்சி சூப்பரோ சூப்பரான ஆட்சி என சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் கூறியுள்ளார்.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கோவை உக்கடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றார் பின்னர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
37 எம்.பிகளால் பலனில்லை என்று பிரேமலதா சொல்வது அந்தம்மாவோட சொந்த கருத்து. தேமுதிக கட்சியை தமிழ்நாடே பார்க்கின்றது. இங்கொன்றும் அங்கொன்றும் என தேமுதிக இரு பக்கமும் பேசுகின்றது தேமுதிக இரு கட்சிகளுடனும் பேசுவது மிகப்பெரிய தவறு நாகரீகம் தெரியாமல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைக் எதிர்த்து விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தேமுதிக வீழ்ச்சிக்கு காரணம். .அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தால் அதன் மூலம் அதிமுகவிற்க்கு ஒரு 500,1000 ஒட்டு கிடைக்கும். அது தங்களுக்கு நல்லது தானே என்றும் தெரிவித்தார்.
மேலும் 500 வாக்குகள் வைத்திருக்கும் மதிமுகவுடன் ,திமுக கூட்டணி வைத்திருக்கும் போது. நாங்கள் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தப்பு…என கூறிய அவர்,அம்மா ஆட்சி சூப்பர் ஆட்சி, எடப்பாடி ஆட்சி சூப்பரோ சூப்பரான ஆட்சி எனவும் அவர் தெரிவித்தார்..