August 26, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்ட பட்டியலின சமுதாய அமைப்புகளின் சார்பில் வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலையை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தி௫வு௫வச் சிலை உடைக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வ௫கின்றன. இந்நிலையில் இப்படிப்பட்ட உன்னதமான தலைவரை ஜாதி ரீதியான கண்ணோட்டத்தில் பார்த்து அவர் சிலையை அமைதியாக உள்ள தமிழ்நாட்டை எதாவது ஒ௫ வகையில் கலவரத்தை ஏற்படுத்த அந்த உன்னதமான தலைவரின் சிலையை உடைத்துள்ளனர். இந்த போக்கை கண்டித்து தமிழ்நாடு காவல்துறை CBCID விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட பட்டியலின சமுதாய அமைப்புகளின் சார்பாக கோவை காவல்துறை தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.