• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைதிப் பூங்காவில் கொஞ்சம் புயல்! நீதிக்காக வீதி வந்திருக்கிறோம் – விவேக்

April 12, 2018 தண்டோரா குழு

அமைதிப் பூங்காவில் கொஞ்சம் புயல்! நீதிக்காக வீதி வந்திருக்கிறோம் என நடிகர் விவேக் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பிலும் கண்டங்கள் எழுந்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றது.இதனால் தமிழகம் போரட்டக்களமாக மாறியுள்ளது.இந்நிலையில் நடிகர் விவேக் போராட்டங்கள் குறித்து டுவீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,

அமைதிப் பூங்காவில் கொஞ்சம் புயல்!நீதிக்காக வீதி வந்திருக்கிறோம்.விரைவில் பூங்காற்று திரும்பும்.பொதுவாக கன்னட மக்கள் அன்பானவர்கள்.அவர்கள் வீட்டு சாம்பாரே இனிக்கும்.இது பல நாள் அரசியல்.கடினம் கடப்போம்;மனிதம் படைப்போம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க