• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமியிடம் இன்று மீண்டும் விசாரணை

April 17, 2017 தண்டோரா குழு

வருமான வரித்துறை நடத்திய சோதனையின் தொடர்பாக மீண்டும் சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரும், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி திங்கட் கிழமை நேரில் ஆஜராக உள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் கடந்த 7-ம் தேதியன்று, சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேரில் ஆஜராக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. அவர்களும் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமிக்கு மீண்டும் ஆஜராக வருமானவரித்துறை கடந்த வாரம் சம்மன் அனுப்பியது. இதன் காரணமாக இருவரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக உள்ளனர்.

மேலும் படிக்க