• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமியிடம் இன்று மீண்டும் விசாரணை

April 17, 2017 தண்டோரா குழு

வருமான வரித்துறை நடத்திய சோதனையின் தொடர்பாக மீண்டும் சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரும், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி திங்கட் கிழமை நேரில் ஆஜராக உள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் கடந்த 7-ம் தேதியன்று, சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேரில் ஆஜராக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. அவர்களும் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமிக்கு மீண்டும் ஆஜராக வருமானவரித்துறை கடந்த வாரம் சம்மன் அனுப்பியது. இதன் காரணமாக இருவரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக உள்ளனர்.

மேலும் படிக்க