• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை -எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன்

June 6, 2017 தண்டோரா குழு

தினகரனுக்கு எதிராக பேசிய அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரனை அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் இன்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன்,

தமிழகத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை என்றும் அதிமுகவில் தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என்றும் கூறினார். மேலும்,நிதி அமைச்சர் ஜெயக்குமார் மீதான நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க