• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் சரோஜா தன்னை மிரட்டுவதாக அதிகாரி மீனாட்சி புகார் !

May 11, 2017 தண்டோரா குழு

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தன்னை மிரட்டுவதாகவும், தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி மீனாட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நான் தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். என் பணியை சரியாக செய்து வருகிறேன். சில நாட்களாக மறைமுகமாக பணியைவிட்டு செல்ல எனக்கு நெருக்கடிவந்தது.

குழந்தைகள் நல பாதுகாப்பு தொடர்பான புத்தகம் வெளியீடு தொடர்பாக சந்திக்க கடந்த ஞாயிறன்று அமைச்சர் சரோஜா வீட்டுக்கு சென்றேன். அங்கு அமைச்சர், அவரது கணவர் உட்பட மூன்று பேர் இருந்தனர். அவர்கள் என்னிடம் பணிக்காக லஞ்சம் எதிர்பார்த்தனர். குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி பதவி ரூ.10 லட்சம் போகும் என்றனர்.

நான் எனது குழந்தையுடன் தனியாக வசிப்பதால், சென்னைக்கு பணியிட மாற்றம் கேட்டிருந்தேன். இதற்கு ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றனர். பணம் தர வேண்டும். அல்லது நானாக ராஜினாமா செய்ய வேண்டும் என மிரட்டினர். ராஜினாமா செய்யாவிட்டால் பணிநீக்கம் செய்வோம், தேவையில்லாமல் புகார் செய்வோம் என மிரட்டல் விடுத்தனர்.

என்னுடைய பணி ஒப்பந்த பணி தான். நிரந்தர பணி கிடையாது. முதல்வரிடம் மனு கொடுக்க முயற்சி செய்தேன். அதன் பின் அமைச்சர் தங்கமணியிடம் புகார் மனு அளித்துள்ளேன்.

இந்த மிரட்டல் தொடர்பாக ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரம் உள்ளது. மிரட்டலுக்கான ஆதாரத்தை தமிழக ஆளுனருக்கு அனுப்பியுள்ளேன். பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் ஆளை வைத்து காலி செய்துவிடுவேன் என அமைச்சரின் கணவரும், அமைச்சரும் கூறினர்.

எனது வாழ்க்கைக்கும் பணிக்கும் பாதுகாப்பு வேண்டும். சமூக நலத்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடினால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க