• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீக்கம், தினகரன் அறிவிப்பு

August 23, 2017 தண்டோரா குழு

அதிமுக(புரட்சி தலைவி அம்மா ) கட்சி பொறுப்பிலிருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பல நீர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அம்மா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ரங்கசாமி, கட்சியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்ட பொருளாளர் பதவியில் இருந்து எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பொறுப்பில் இருந்து என்.அழகர்சாமி நீக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு பதில் விருதுநகர் மாவட்ட பொருளாளராக டி.முத்தையா, விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளராக சி.சுப்ரமணியன், மாவட்ட இணைச் செயலாளராக என்.அழகர்சாமி, புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளராக கே.விவேகானந்தன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் மா.சேகர் நியமிக்கப்படுகிறார். மதுரை மாவட்ட புறநகர் செயலாளர் பதவியில் இருந்து ராஜன் செல்லப்பா நீக்கப்படுகிறார். அவருக்கு பதில் இ.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க