• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர்களுக்கு யாரிடம் பயம் என்பது விரைவில் தெரியும்– டிடிவி தினகரன்

June 5, 2017 தண்டோரா குழு

அமைச்சர்களுக்கு யாரிடம் பயம் என்பது விரைவில் தெரியும்என அதிமுக துணைப் பொதுசெயலாளர்டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க லட்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யபட்ட அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று தனது மனைவியுடன் சென்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கட்சியில் இருந்து, என்னை ஒதுங்க சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை,” அமைச்சர்கள் ஏதோ பயத்துடன் உள்ளனர். அவர்களுக்கு யாரிடம் பயம் என்பது விரைவில் தெரியும். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தொண்டர்கள் என்னை அழைக்கிறார்கள். எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு என்னால் எந்த பாதிப்பும் வராது.கட்சியின் பொதுச்செயலாளர் அறிவுரையை ஏற்று செயல்படுவேன்.

அதற்காகவே இங்கு வந்துள்ளேன்” என்று கூறினார். மேலும், வானளாவிய அதிகாரம் படைத்த அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கூறுவது சரியல்லை,இரண்டு அணிகளும் இணைய கடந்த 45 நாட்களாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், 60 நாட்கள் வாய்ப்பு கொடுப்போம் என சசிகலா கூறியுள்ளார். அதுபடி செயல்படுவோம்.

இவ்வாறு தினகரன் கூறினார்.

மேலும் படிக்க