• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமேசானில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை

July 12, 2017 தண்டோரா குழு

பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் தற்போது இந்தியாவில் உணவு மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ளது.

பிரபல அமேசான் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் அதன் வியாபாரத்தை விரிவாக்கி கொண்டு வருகிறது. இதனால் அதன் போட்டியாளரான பிலிப் கார்ட் நிறுவனத்துடன் போட்டிபோட்டுக் கொண்டு இருக்கிறது.

வாடிக்கையாளர்களை ஈர்க்க உடை, ஸ்மார்ட் போன் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்து வந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் உணவு மற்றும் மளிகை விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இந்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அமேசான் நிறுவனம் உணவு பிரிவில் சுமார் 5௦௦ மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது என்றும் அதுவும் ஏற்கனவே இந்தியாவில் 5 மில்லியன் டாலருக்கு மேலாக முதலீடு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமேசான் நிறுவனம் உணவு பொருட்களை அமேசான் பான்ட்ரி வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வருகிறது. இந்தியாவின் பிக் பசார், ஸ்டார் பசார் மற்றும் ஹைபெர்சிட்டி ஆகியோருடன் இணைந்து “Amazon Now” செயலி மூலம் மளிகை பொருள்களை விநியோகம் செய்து வருகிறது.

ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் டைகர் குளோபல், டெண்சென்ட் ஹோல்டிங் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் உணவு மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க