• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்கா மீது வட கொரியா தாக்குதல் நடத்த முடியாது – டொனால்ட் டிரம்ப்

January 3, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவைத் தாக்கும் அளவுக்கு வடகொரியாவால் அணு ஆயுதத்தையெல்லாம் தயாரிக்க முடியாது. அதன் தாக்குதல் திட்டம் எதுவும் நிறைவேறாது என்று அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் கூறினார்.

வட கொரியா அதிபர் கிம் ஜங்-யுன் புத்தாண்டு உரையில், “வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைத் தயாரித்து வருகிறது. அமெரிக்க நாட்டையும் தாக்கும் வல்லமை உடையது. விரைவில் அந்த ஏவுகணையைச் சோதித்துப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதில் தரும் வகையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் கூறியதாவது:

அமெரிக்க நாட்டைத் கூட தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையைத் தயாரித்து வருவதாக வட கொரிய அதிபர் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அந்த எண்ணம் கண்டிப்பாக நிறைவேறாது. சீனா அமெரிக்காவின் மூலம் ஏராளமான வர்த்தக பயன்களைப் பெற்றிருக்கிறது. எனவே, வட கொரியாவுக்கு அந்நாடு எந்த உதவியும் செய்யாது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொரியா ஆறு முறை செயல்படுத்தியுள்ளது. ஆனாலும், வட கொரியாவின் சோதனைகள் துல்லியமாகச் செயல்பட முடியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க