September 15, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவில் ஹார்வே புயலுக்கு பிறகு, டெக்ஸ்சாஸ் கடற்கரையில் அரிய வகை உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
அட்லாண்டிக் கடலில் உருவாகிய ஹார்வே புயல் அமெரிக்காவை கடுமையாக தாக்கியது.இந்த புயல் ஓய்ந்த பிறகு, டெக்ஸ்சாஸ் கடற்கரையில் அரிய வகை உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
புயல் சேதங்களை ஆய்வு செய்து வரும் ப்ரீத்தி தேசாய் என்பவர், இந்த உயிரினத்தை புகைப்படம் எடுத்து,இது எந்த வகை உயிரனம் என்று யாராலும் சொல்ல முடியுமா? என்று சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதுக்குறித்து அமெரிக்காவின் “Department of Vertebrate Zoology, Division of Amphibians and Reptiles” துறையைச் சேர்ந்த டாக்டர் கென்னத் டிக்கே என்பவர் உதவ முன் வந்துள்ளார்.
“டெக்சாஸ் கடற்கரையில் கரையில் ஒதுங்கியது,‘அனோப்ளோகாஸ்றிடே’(Anoplogastridae) என்னும் மீன் குடும்பத்தை சேர்ந்த மீன் ஆகும்.பொதுவாக இந்த வகையான மீன் கடலின் ஆழமான பகுதிகளில் தான் வசிக்கும்.இந்த மீன்கள் அவ்வப்போது டெக்சாஸ் கடற்கரையில் காணப்படும்.
இந்த மீன் சுமார் 33 அடி வரை நீளமுடையது.இந்த மீன்கள் பெரும்பாலும் நண்டுகள்,மற்றும் இறால்,ஆகியவற்றை உண்டு உயிர் வாழும். மேற்கு அட்லாண்டிக் கடலில் சுமார் 108 முதல் 3௦௦ அடி ஆழத்தில் இந்த மீன் இனம் வாழ்ந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.