• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் ஹார்வி புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கிய அரிய வகை உயிரினம்

September 15, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் ஹார்வே புயலுக்கு பிறகு, டெக்ஸ்சாஸ் கடற்கரையில் அரிய வகை உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அட்லாண்டிக் கடலில் உருவாகிய ஹார்வே புயல் அமெரிக்காவை கடுமையாக தாக்கியது.இந்த புயல் ஓய்ந்த பிறகு, டெக்ஸ்சாஸ் கடற்கரையில் அரிய வகை உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

புயல் சேதங்களை ஆய்வு செய்து வரும் ப்ரீத்தி தேசாய் என்பவர், இந்த உயிரினத்தை புகைப்படம் எடுத்து,இது எந்த வகை உயிரனம் என்று யாராலும் சொல்ல முடியுமா? என்று சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதுக்குறித்து அமெரிக்காவின் “Department of Vertebrate Zoology, Division of Amphibians and Reptiles” துறையைச் சேர்ந்த டாக்டர் கென்னத் டிக்கே என்பவர் உதவ முன் வந்துள்ளார்.

“டெக்சாஸ் கடற்கரையில் கரையில் ஒதுங்கியது,‘அனோப்ளோகாஸ்றிடே’(Anoplogastridae) என்னும் மீன் குடும்பத்தை சேர்ந்த மீன் ஆகும்.பொதுவாக இந்த வகையான மீன் கடலின் ஆழமான பகுதிகளில் தான் வசிக்கும்.இந்த மீன்கள் அவ்வப்போது டெக்சாஸ் கடற்கரையில் காணப்படும்.

இந்த மீன் சுமார் 33 அடி வரை நீளமுடையது.இந்த மீன்கள் பெரும்பாலும் நண்டுகள்,மற்றும் இறால்,ஆகியவற்றை உண்டு உயிர் வாழும். மேற்கு அட்லாண்டிக் கடலில் சுமார் 108 முதல் 3௦௦ அடி ஆழத்தில் இந்த மீன் இனம் வாழ்ந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க