• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் புலம் பெயரும் 200 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி

July 12, 2017 தண்டோரா குழு

வெளி நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டில் புலம்பெயரும் சுமார் 2௦௦பேரை வரவேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

அமெரிக்காவின் புதிதாக சுமார் 2௦௦ நபர்கள் அங்கு குடிபெயர்கிறார்கள். அவர்களை பாஸ்டன் நகரில் மறைந்த முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான் கென்னடிக்கு சொந்தமான நூலகம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ள இடத்தில் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவின் மாசாசுசெட்ட்ஸ் மாநிலத்தின் அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி, டென்னிஸ் சாயலோர் ஆகியோர் இதில் கலந்துக்கொண்டு உரையாற்றுகிறார்கள்.மேலும் இந்த விழாவில் கலந்துக் கொள்ள உள்ள அனைவருக்கும், ஜான் கென்னடி பேசிய உரையை புத்தகமாக தயார்படுத்தப்பட்டு, விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சி அமெரிக்காவின் நீதித்துறை, அமெரிக்க குடியுரிமை துறை ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறுகிறது.

மேலும், மறைந்த முன்னாள் அமெரிக்க குடியரசு தலைவர் ஜான் கென்னடி அமெரிக்காவின் 35வது குடியரசு தலைவர் ஆவார். அவருடைய மூதாதையர்கள் அயர்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க