• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்போது எங்கே போனீர்கள் ராகுல் காந்திக்கு தமிழிசை பதிலடி

October 21, 2017 தண்டோரா குழு

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவற்றை விமர்சித்து வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர்கள் அந்த காட்சியை நீக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனினும் திரையிலகை சேர்ந்த பலர் விஜய்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மெர்சலுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து, உடனே ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

அதாவது, உங்கள் காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு இலங்கையில் எம் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லபட்டபோது எங்கே போனீர்கள் ராகுல் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை பதிவிட்டுள்ளார்.

சமீப நாட்களாக மெர்சல் பட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க