• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அப்துல் கலாம்நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

July 27, 2017 தண்டோரா குழு

ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் டாக்டர். அப்துல் கலாம் தேசிய நினைவு மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமுக்கு மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பில் நினைவகம் அமைக்கப்பட்டது.

இந்த மண்டபம் சுமார் 16 கோடி ரூபாயில் செலவில் கட்டப்பட்டுள்ளது. டாக்டர். அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதன் பின்னர் கலாம் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மோடி கலாம் குடும்பத்தினரையும் சந்தித்து மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள், தமிழக கட்சித் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க