March 2, 2019 தண்டோரா குழு
டெல்லியிலுள்ள மருத்துவமனையில் இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார் .
இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யபட்டார். அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என இந்தியா சார்பில் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து, நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை லாகூரில் உள்ள இந்திய தூதரிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. பின்னர் வாகா எல்லை வழியாக அபிநந்தன் தாயகம் திரும்பினார். இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லையில் ஏராளமானோர் பொதுமக்கள் குவிந்து அபிநந்தனுக்கு தேசிய கொடியசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாகிஸ்தானில் இருந்து நேற்று நாடு திரும்பிய அபிநந்தன் டெல்லியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அபிநந்தனை மருத்துவமனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்
போர் விமானி அபிநந்தனின் உடல் நிலை குறித்து நிர்மலா சீதாராமன் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.