• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்பை குறித்து பேச மக்கள் முன்வரவேண்டும் – அர்னால்ட்

August 16, 2017 தண்டோரா குழு

வெறுப்பை எதிர்த்து, அன்பை குறித்து அதிகம் பேச மக்கள் முன் வர வேண்டும் என்று பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை வெளிபடுத்தும் விதமாக பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது. அந்த பேரணி வன்முறையாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட், வெறுப்பு தன்மைக்கு எதிராக போராடும் அமைப்பான ‘சைமன் அமைப்புக்கு 10,0000 டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

“வெறுப்பை எதிர்த்து, அன்பை குறித்து அதிகம் பேச மக்கள் முன்வரவேண்டும். வெறுப்பை காட்டும் மக்கள் ஒருபோதும் வெற்றி அடையமாட்டார்கள். அன்பை ஆதரிக்கும் எங்களுடைய குரல் அதிகமாகவும், சத்தமாகவும், தெளிவாகவும் உள்ளது.அமெரிக்க ஒருபோதும் வெள்ளையர்கள் மட்டும் இருக்கும் நாடாக இருக்காது.” என்று அர்னால்ட் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க