• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்னூரில் விவசாய கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம்

August 19, 2021 தண்டோரா குழு

அன்னூர் ஒட்டர்பாளையத்தில் விவசாயியை தாக்கிய கிராம உதவியாளர் முத்துசாமியை நிரந்தர பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் விவசாயி மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் அன்னூரில் விவசாய கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோபுரத்தை சேர்ந்த விவசாயி கோபால்சாமி நிலப் பிரச்சனைக்கு ஒட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலருக்கு சென்றபோது கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி விவசாயியை கடுமையாக தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.பின்னர் அவரே விவசாயி காலில் விழுந்து விட்டு தன்னை விவசாயி கோபால்சாமி காலில் விழுந்து விட்டதாக பொய் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் விவசாயி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் முத்துசாமி வேண்டுமென்றே விவசாயி மீது குற்றம்சாட்டிய வீடியோ வெளியான நிலையில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி மீது போர்க்கொடி தூக்கி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் விவசாயி கோபால்சாமிக்கு ஆதரவு தெரிவித்து விவசாய சங்கங்கள் இன்று அன்னூரில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.இதனையடுத்து அன்னூர் முழுவதும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன அன்னூர், பொகலூர், குருக்கிலியாபாளையம், கரியாம்பாளையம்,கஞ்சம் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் கோபால்சாமி மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நீக்க வேண்டும் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி மீதும் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியையும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் அதுவரை போராட்டம் தொடர உள்ளதாக விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க