• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்து ரேசன் கடைகளிலும் கண்காணிப்பு குழு அமைக்க கோரிக்கை

September 30, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் காலண்டு கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் காணொளி மூலமாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு சார்பில் செயலர் லோகு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:

அனைத்து ரேசன் கடைகளிலும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். அதுபோல மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும். அவிநாசி சாலையில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது எனவே சாலை நடுவே தடுப்பு கற்கள் அமைக்க வேண்டும். கோவையில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களில் பலர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருபவரிடம் பணத்தை கேட்டு மிரட்டுவது அதிகரித்து வருகிறது.

கோவை மாநகராட்சி முழுவதும் சாக்கடைகள் மேல் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாக்கடை தூர் வார வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க