• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு

May 12, 2017 தண்டோரா குழு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான குற்றசாட்டுகள் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

அண்மையில் உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்தது என பெரும்பாலான கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனையடுத்து மின்னணு இயந்திரம் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் நடந்தும் இக்கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இரு அணிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் அதிமுக அம்மா அணி சார்பில் தம்பிதுரை, தளவாய் சுந்தரம், வேணுகோபால் எம்.பி.ஆகியோர் பங்கேற்கின்றனர். அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் பங்கேற்க உள்ளனர்.தமிழகத்தில் இருந்து திமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன.

மேலும் படிக்க