• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனிதா வீட்டிற்கு சென்ற விஜயை நான் பாராட்ட மாட்டேன் – பிரபல இயக்குநர்

September 11, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வால் தனது மருத்துவக்கனவை இழந்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மறைவு ஒட்டு மொத்த தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இதற்கிடையில் பலரும் அனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவந்த நிலையில் நடிகர் விஜய் இன்று அனிதாவின் வீட்டிற்கு சென்றிருந்தார்.அங்கு அனிதாவின் புகைப்படத்திற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அனிதாவின் குடும்பத்திற்காக ரூ 1 லட்சம் நிதி உதவி அளித்திருந்தார்.இதற்காக திரையிலகினர் பலரும் விஜயை பாராட்டி டுவிட் செய்து வந்தனர்.

ஆனால், நடிகர் சேரன் அவரது ட்விட்டரில் கூறியுள்ளதாவது,

cheran

அனிதாவின் வீட்டிற்கு ஆறுதல் சொல்லி நிதி உதவி அளித்ததற்காக நான் உங்களை பாராட்ட மாட்டேன், இது உங்களின் கடமை. உங்களின் பணி தொடரட்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க