• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனிதா குடும்பத்திற்கு 7 லட்சம் நிதி உதவி – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

September 1, 2017 தண்டோரா குழு

தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனிதாவின் தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்டு நான் மிகவும் துயரம் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அனிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் நிதி உதவி வழங்க உத்திரவிட்டுள்ளேன்.

மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க