• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனிதாவின் மரணம் தொடர்பாக கோவையில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம்

September 2, 2017 தண்டோரா குழு

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவையில் ரயில் நிலையைத்தை முற்றுகையிட்டனர்.

அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் எனக் கூறி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல அமைக்கள் இணைந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இதனால் கோவை ரயில்நிலைய சாலையில் போக்குவரத்து சிறுது நேரம் பாதிக்கப்பட்டது. இதில் மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல் கோவை வழக்கறிஞர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க