• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனிதாவின் மரணம் தொடர்பாக கோவையில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம்

September 2, 2017 தண்டோரா குழு

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவையில் ரயில் நிலையைத்தை முற்றுகையிட்டனர்.

அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் எனக் கூறி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல அமைக்கள் இணைந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இதனால் கோவை ரயில்நிலைய சாலையில் போக்குவரத்து சிறுது நேரம் பாதிக்கப்பட்டது. இதில் மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல் கோவை வழக்கறிஞர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க