• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனிதாவின் மரணத்தை தொடர்ந்து அரியலூரில் கடையடைப்பு

September 2, 2017 தண்டோரா குழு

அனிதாவின் மரணத்தையொட்டி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கடையடைப்பு நடைபெற்று வருகிறது .

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா நேற்று(செப் 1) தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்திற்கு மட்டும் நீட்டிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கூறியதும் தமிழகத்தில் பல மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்துவிட்டது.

இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து சட்ட ரீதியாக போராடிய மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர்,மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டிக்கும் வகையிலும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் நடக்கிறது.தமிழகம் முழுவதும் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க